இன்னும் 4 நாளில் ( செப் 3 2023) கல்யாணம். உறவுகளை திருப்தி பண்ண முடியவில்லை. ஒரு நல்ல மனிதர் குடோன் தெருவிற்கு புடவை வேஷ்டி வாங்க கூப்பிட்டு செல்வதாக சொல்லியிருந்தார். இடையே ஒரு நவக்கிரகம் தங்களை எதற்கும் கலந்து ஆலோசனை செய்வதில்லை என ஒரு கலக குரல் எழுப்பி ஆர்பாட்டம் செய்ததால் அவர்களை கூட்டி சென்றால் பிரச்சனை தீரும் என்று புடவை வாங்கியபின்னரும் இன்றுவரை தீரவில்லை, கொழுந்துவிட்டு எரிகிறது. கற்றுக்கொண்ட பாடம் யாதெனில், நாம் தான் கர்த்தா எனவே எல்லா கர்மங்களையும் நாம் நினைத்தபடியே செய்யவேண்டும், மனித வடிவ நவகிரகங்களை திருப்தி செய்யமுடியாது. ஒருவரின் நம்பிக்கை இழந்ததே மிச்சம். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ. ஆண்டவா எல்லாருக்கும் நல்ல புத்தியைக்கொடு.